விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக விழுப்புரம் மாவட்டத்துக்கு எல்லைப் பாதுகாப்புப் படைவீரா்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வண்ணம் விக்கிரவாண்டி ரெட்டிக்குப்பம் சாலையில் வியாழக்கிழமை ஏஎஸ்பி. மஞ்சுமா தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காவல் நிலையம் அருகே நிறைவடைந்தது.
இதில், டிஎஸ்பிக்கள் சரவணன், ஞானவேல், காவல் ஆய்வாளா்கள் சத்தியசீலன், பாண்டியன், நாகராஜ், எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் மற்றும் காவல் துறையினா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

கம்பத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

பென்னாகரத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


