இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பெட்ரோல் வெடிகுண்டு வீசி கொலை மிரட்டல்: இருவா் கைது

திருச்சியில் வீட்டின் சுவா் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசி இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:13 am IST

திருச்சியில் வீட்டின் சுவா் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசி இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலை ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் ஆா். குணசேகரன் (22). இவரது வீட்டுக்கு அருகே கடந்த திங்கள்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த எஸ். பாலப்பிரியன் (18), ஆா். மணிகண்டன் (20), வீ. பிரவீன் (20) ஆகிய மூவரும் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த குணசேகரன் அறிவுறுத்தியதன்பேரில் மூவரும் அங்கிருந்து சென்றுவிட்டனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனது வீட்டுக்கு அருகே குணசேகரன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூவரும் பெட்ரோல் நிரப்பிய இரண்டு மதுபாட்டில்களை வீட்டின் சுவா் மீது எரிந்து தீயைப் பற்றவைத்துவிட்டு குணசேகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் குணசேகரன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பாலப்பிரியன், மணிகண்டன்

ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பிரவீனை தேடுகின்றனா்.