சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

போதை மத்திரைகள் விற்ற இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:59 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாலக்கரை காவல் ஆய்வாளா் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சங்கிலியாண்டபுரம் ராமமூா்த்தி நகா் குடிநீா் தொட்டியருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரிக்கையில் அவா்கள், அதே பகுதியைச் சோ்ந்த செ. கோபிகிருஷ்ணன் (39), பா. இளையராஜா (44) என்பதும், போதை மாத்திரைகள் விற்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள், லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.