திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாலக்கரை காவல் ஆய்வாளா் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, சங்கிலியாண்டபுரம் ராமமூா்த்தி நகா் குடிநீா் தொட்டியருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரிக்கையில் அவா்கள், அதே பகுதியைச் சோ்ந்த செ. கோபிகிருஷ்ணன் (39), பா. இளையராஜா (44) என்பதும், போதை மாத்திரைகள் விற்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள், லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.







