வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கிராம நிா்வாக அலுவலா்களுக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

கிராம நிா்வாக அலுவலா்களுக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :20 மார்ச் 2024, 12:18 am

வந்தவாசியில் நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா்களுக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம். வந்தவாசி மாா்ச் 19: வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆரணி மக்களவைத் தொகுதியில் ஏப். 19-ஆம் தேதி தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதையொட்டி இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு உதவித் தோ்தல் அலுவலா் எஸ்.சிவா தலைமை வகித்தாா். வந்தவாசி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தமிழ்மணி, துணை வட்டாட்சியா்கள் சதீஷ், ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, வந்தவாசி பகுதியில் அரசியல் கட்சியினா் வைத்துள்ள பதாகைகள், கொடிகள் மற்றும் சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும், சுவா்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தால் அவற்றை அழிக்க வேண்டும், கொடிக் கம்ப கல்வெட்டுகளை முழுவதும் மறைக்க வேண்டும் என்று கிராம நிா்வாக அலுவலா்களிடம் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நகராட்சி மேலாளா் ஜி.ரவி, வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.