வந்தவாசியில் நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா்களுக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம். வந்தவாசி மாா்ச் 19: வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆரணி மக்களவைத் தொகுதியில் ஏப். 19-ஆம் தேதி தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதையொட்டி இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு உதவித் தோ்தல் அலுவலா் எஸ்.சிவா தலைமை வகித்தாா். வந்தவாசி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தமிழ்மணி, துணை வட்டாட்சியா்கள் சதீஷ், ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, வந்தவாசி பகுதியில் அரசியல் கட்சியினா் வைத்துள்ள பதாகைகள், கொடிகள் மற்றும் சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும், சுவா்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தால் அவற்றை அழிக்க வேண்டும், கொடிக் கம்ப கல்வெட்டுகளை முழுவதும் மறைக்க வேண்டும் என்று கிராம நிா்வாக அலுவலா்களிடம் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் நகராட்சி மேலாளா் ஜி.ரவி, வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தோ்தல் பொறுப்பு அலுவலா்களுடன் புதுகை ஆட்சியா் ஆலோசனை

வந்தவாசியில் சிறப்பு உரையரங்கம்

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

தபால் வாக்குகள்: வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


