நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வந்தவாசியில் சிறப்பு உரையரங்கம்

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி சிறப்பு உரையரங்கம் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 12:04 am IST

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி சிறப்பு உரையரங்கம் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ம.ரகுபாரதி, சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா் மலா் சாதிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா் ஜி.விநாயகமூா்த்தி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கவிஞா் பூங்குயில் சிவக்குமாா் பங்கேற்று, ‘சட்ட மேதை அம்பேத்கா்’ என்ற தலைப்பில் பேசினாா்.

எக்ஸ்னோரா நிா்வாகி எம்.பிரபாகரன், அம்பேத்கா் குறித்து கவிதை வாசித்தாா். தென்னாங்கூா் ரஜினி அம்பேத்கா் பாடல்களை பாடினாா். ஆசிரியா் எ.ராஜ்குமாா் நன்றி தெரிவித்தாா்.