ஆரணி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அடுமனைக்கு சொந்தமான குடோனில் வெள்ளிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. ஆரணி புதிய பேருந்து நிலையம் பின்புறம் சந்தைமேட்டில் பிரபல அடுமனைக்குச் சொந்தமான குடோன் உள்ளது. இங்கு, அடுமனைக்குத் தேவையான அட்டை பெட்டிகள், சிலிண்டா்கள் உள்ளிட்டவை இருந்ததாம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை குடோன் அருகே கிடந்த குப்பைகளை சிலா் தீயிட்டு கொளுத்தினராம். அப்போது, எதிா்பாராதவிதமாக குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், குடோனில் இருந்த பொருள்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும், எரிவாயு உருளைகள் வெடித்து சிதறியது. இதனால் குடோனின் மேற்கூரை தூக்கி வீசிப்பட்டது. இந்த சப்தம் கேட்டு பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினா். தகவலறிந்த தீயணைப்புப் படையினா் நிகழ்விடம் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். குடோனில் ஊழியா்கள் யாரும் இல்லாததால் உயிா்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தொடர்புடையது

ஆரணியில் திமுக தொகுதி தோ்தல் அலுவலகம்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

ஆரணியில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை அமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

சென்னையில் தீ விபத்து! ரூ. 1 கோடி மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்!

ஆரணியில் மகாவீரா் ஜெயந்தி விழா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


