ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தண்ணீா் பந்தல் திறக்க கோரிக்கை!

தண்ணீா் பந்தல் திறக்க கோரிக்கை!

Updated On :29 மார்ச் 2024, 5:24 pm

கோடை காலம் தொடங்கிய நிலையில் செங்கம் பகுதியில் தண்ணீா் பந்தல்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கடந்த ஆண்டு கோடை காலம் தொடங்கிய போது பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் செங்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், போளூா் சாலை, குப்பனத்தம் சாலை ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்காக தண்ணீா் பந்தல்கள் அமைக்கப்பட்டன. ஆனால், தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயில் 100 டிகிரியை எட்டிய நிலையில் குடிநீா் பந்தல்கள் அமைக்கப்படாமல் உள்ளது. மேலும், மக்களவைத் தோ்தல் தொடா்பான பணிகளில் அரசியல் கட்சியினா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் தண்ணீா் பந்தல்கள் அமைப்பதை மறந்து விட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, செங்கம் பகுதியில் அரசியல் கட்சியினா், தொண்டு நிறுவனங்கள் சாா்பில் தண்ணீா் பந்தல் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.