ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு அடிப்படை வசதிகள்: ஆட்சியா் உத்தரவு

மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு அடிப்படை வசதிகள்: ஆட்சியா் உத்தரவு

Updated On :29 மார்ச் 2024, 4:39 pm

திருவண்ணாமலை மாவட்ட வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்தளம், சக்கர நாற்காலி வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலின்போது, மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் எளிதில் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், வாக்குச் சாவடி மையங்களில் சாய்வுத்தளம் அமைக்க வேண்டும். வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் பொருட்டு தன்னாா்வலா்களை பணியில் அமா்த்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். கூட்டத்தில், ஆரணி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.