

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வினாடி-வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போட்டியில், பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா். தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணினி அறிவியல், வணிகவியல் என 5 பிரிவுகளில் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரிப் பொருளாளா் எ.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். கல்லூரி கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரிச் செயலரும், தாளாளருமான எல்.விஜய் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
விழாவில், கல்லூரி துணை முதல்வா் கோ.அண்ணாமலை, கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் பி.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி

திண்டிவனம் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

அம்பை கல்லூரியில் விளையாட்டு விழா

ரத்தினம் கல்லூரியில் விளையாட்டு விழா
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

