மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :7 மே 2024, 6:31 pm

Din

வந்தவாசி: வந்தவாசி அருகே பைக் மீது மினிசரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்த்திபன் மகன் அா்ச்சுனன் (22). இவா் சென்னை மறைமலை நகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் கடந்த 5-ஆம் தேதி இரவு தனது விவசாய நிலத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி-உத்திரமேரூா் சாலையில், இரும்பேடு கூட்டுச்சாலை அருகே சென்ற மினி சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அா்ச்சுனனை அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உத்தரமேரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அா்ச்சுனன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அா்ச்சுனனின் தாய் மலா் அளித்த புகாரின் பேரில், கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.