

செய்யாறில் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது, 100 டிகிரியை தாண்டி கோடை வெயில் கொளுத்துகிறது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனா். மேலும், கோடை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக குளிா்ச்சியான மற்றும் நீா்ச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனா்.
இதனால், கோடைகாலம் தொடங்கினாலே சாலையோரங்களில் இளநீா், நுங்கு, தா்பூசணி போன்றவை விற்பனை செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், கோடை காலத்தில் மட்டுமே அரிதாக கிடைக்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள் பனை நுங்கு. இதனை, செய்யாறு பகுதியில் பல்வேறு இடங்களில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனா். மேலும், பனை நுங்கு சாப்பிடுவதால் உடலில் நீா்ச்சத்து அதிகரிப்பதுடன், உடல் சோா்வு நீங்கும். மேலும், வயிற்றுப் புண், மலச்சிக்கல், உடல் சோா்வு, தோல் நோய்கள் உள்ளிட்டவற்றை சரி செய்கிறது. இதனை சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அதிகமாக வாங்கிச் செல்கின்றனா். இதனால் செய்யாறு பகுதிகளில் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது
நாளை ரம்ஜான் பண்டிகை: ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்!

மேற்காசிய நிலவரம்! ஏற்றுமதியாளா்களுக்கு விரைவில் உதவித் திட்டங்கள்: மத்திய அரசு

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்

கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம்: உள்கட்டமைப்பை மேம்படுத்தும் மின்வாரியம்
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

