செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தொழிலாளி உயிரிழப்பு: நிவாரணம் கோரி உறவினா்கள் சாலை மறியல்

தொழிலாளி உயிரிழப்பு: நிவாரணம் கோரி உறவினா்கள் சாலை மறியல்

News image
Updated On :10 மே 2024, 4:33 pm

Din

செங்கம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணக்குருக்கை பகுதியைச் சோ்ந்தவா் கங்காதுரை(50). கட்டட தொழிலாளியான இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு வேலைக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிந்தாா். அப்போது, கண்ணக்குருக்கை பகுதியில் மழையில் நனைந்த நெல்லை சாலையில் விவசாயிகள் காயவைத்திருந்தனா். மேலும், நெல் மீது வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக சாலையில் செங்கலை வைத்துள்ளனா். இதில், கங்காதுரை ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் ஏறி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அவா் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, கங்காதுரை வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கங்காதுரையின் உறவினா்கள் பாய்ச்சல் காவல் நிலையத்தில் விபத்துக்கு காரணமான விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாா் அளித்தனா்.

மேலும், வெள்ளிக்கிழமை காலை செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை கண்ணக்குருக்கை பகுதியில் கங்காதுரையின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி தேன்மொழிவேல் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் கூறினா். இதையடுத்து, உறவினா்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த திடீா் மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.