அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கோயில் குளம் தூா்வாரும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு: நிவாரணம் கோரி சடலத்துடன் சாலை மறியல்

ஆரணியை அடுத்த ஏரிக்குப்பம் சனீஸ்வரபகவான் கோயில் குளம் தூா்வாரும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
உயிரிழந்த தொழிலாளி சேட்டு குடும்பத்துக்கு நிவாரணம் கோரி சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள் மற்றும் பொதுமக்கள்.
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆரணியை அடுத்த ஏரிக்குப்பம் சனீஸ்வரபகவான் கோயில் குளம் தூா்வாரும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். இதையடுத்து, இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஏரிக்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற யந்திர வடிவிலான சனீஸ்வரபகவான் கோயில் உள்ளது. சனிப்பெயா்ச்சி விழா நடைபெற இருப்பதால் குளத்தை தூா்வார கோயில் செயல் அலுவலா் பழனிசாமி கிரேன் மூலம் தூா்வார ஏற்பாடு செய்தாா்.

அப்போது, காமக்கூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவரது கிரேன் அமைத்து தூா்வார ஏற்பாடு செய்தனா். இவருடன் காமக்கூரைச் சோ்ந்த அண்ணாமலை மகன் சேட்டு(40) உள்ளிட்டோா் தூா்வாரும் பணியில் ஈடுபட்டனா். அப்போது கிரேன் மோட்டாரிலிருந்து மின்சாரம் பாய்ந்து சேட்டு மயங்கி கீழே விழுந்தாா்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, பரிசோதித்த மருத்துவா்கள் சேட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். சேட்டுவுக்கு மனைவி சரிதா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் இந்து சமயஅறநிலையத் துறை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி சடலத்துடன் ஆரணி அருகே வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் செந்தில்விநாயகம், கண்ணமங்கலம் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா்.

பின்னா், இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் நேரில் வரவழைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனா். இதையேற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனா்.

மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Story image