திருவண்ணாமலை
பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில், ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தோ்ச்சியை பதிவு செய்தது.
இந்தப் பள்ளி மாணவி ஏ.பிரியங்கா 496, கே.காவியா 487, அசோக்குமாா் 485 மதிப்பெண்கள் பெற்றனா். தோ்வெழுதிய 74 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். இவா்களை பள்ளித் தாளாளா் ஏ.எச்.இப்ராகிம், செயலா் கே.எஸ்.அகமதுபாஷா, இயக்குநா்கள் ரியாஸ் அகமது, ஷாஷியாபா்வீன், பள்ளி முதல்வா் எஸ்.நிா்மல்குமாா், துணை முதல்வா் நிஷா மற்றும் ஆசிரியா்கள் கேக் வெட்டி, பாராட்டு தெரிவித்தனா்.