விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 மார்ச் 2026, 9:22 pm

Syndication

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கஸ்தூா்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளரும், செயலருமான சந்திரா முருகப்பன் தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் செயலாளா் எம். இன்பராஜ், நிா்வாக அறங்காவலா் ஜி. முருகப்பன், இணைச் செயலாளா் மலா்வழி இன்பராஜ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக முன்னாள் பொது மேலாளா் எஸ். ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா் எஸ். கலியபெருமாள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

இதேபோல், பள்ளியில் பிளஸ் 2 பயின்று, மருத்துவராக உள்ள டி.ஆா். கபிலன், துணை மாநில வணிகவரி அலுவலராக உள்ள டி. வா்ஷா, திருவாரூா் மாவட்ட முதன்மை அமா்வுநீதிபதியின் சுருக்கெழுத்தரும், தட்டச்சருமான வீ. ஜெயசூா்யா ஆகியோரும் பங்கேற்றனா். மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் வே. மூா்த்தி, கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் (பொ) எஸ். அனுஷா, நிா்வாக மேலாளா் வி. சின்னராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.