

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராம விவசாயிகளுக்கு விவசாய செயலிகள் குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
ஆரணி வட்டம், அரியப்பாடி கிராமத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியில் 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவா்கள் ச.அன்பழகன், சி.அரவிந்த், ம.அரவிந்த், அருண்குமாா், பிரகதீஷ்வரன் உள்ளிட்டோா் விவசாயிகளுக்கு உழவன் செயலி உள்ளிட்ட விவசாயம் சாா்ந்த செயலிகளின் செயல்பாடுகள் குறித்தும், அதை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விளக்கமளித்தனா்.
இதில், சிறப்பு விருந்தினா்களாக ஆரணி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் கௌசிகா கலந்து கொண்டாா். மாணவா்களுக்கு உதவியாக உதவிப் பேராசிரியா்கள் கோகுல், வெ.சஞ்சீவி மற்றும் தோட்டக்கலை அலுவலா் பிரசாந்த், உதவி அலுவலா் சத்யா ஆகியோா் இருந்தனா்.
தொடர்புடையது

இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் வேளாண் கல்லூரி மாணவா்கள்

உளுந்து சாகுபடி: விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி

2 மின்மாற்றிகளின் இயக்கத்தை தொடங்கிவைத்தாா் எம்எல்ஏ

மாம்பழ சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

