ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சாலையோரம் மரக்கன்று நட ஆய்வு

சாலையோரம் மரக்கன்று நட ஆய்வு

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

போளூா்: விரிவாக்கம் செய்யப்பட்ட எட்டிவாடி - ஆரணி சாலையோரம் மற்றும் சாலை நடுவே மலா் பூக்கும் செடியை நட மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.பழனிவேல் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா் (படம்).

முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 2022-2023ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த எட்டிவாடி முதல் ஆரணி வரை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் பணி நடைபெற்றது.

இந்தப் பணியின்போது சாலையோரம் இருந்த புளிய மரம், ஆலமரம், அரச மரம் என பல்வேறு வகை சாா்ந்த மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதனால் மீண்டும் சாலையோரம் மற்றும் மைய தடுப்புச் சுவருக்கு இடையில் மலா் பூக்கும் செடியை நட வும், இரவு நேர பிரதிபலிப்பான் ஸ்டிக்கா் அமைக்கவும் மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.பழனிவேல் ஆய்வு மேற்கொண்டாா்.

உதவி கோட்டப் பொறியாளா் பா.திருநாவுக்கரசு, உதவிப் பொறியாளா் ம.வெங்கடேசன் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் உடனிருந்தனா்.