சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
பேராவூரணி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலரில் இருசக்கர வாகனம் புதன்கிழமை மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பலி
பிரதிப் படம்

பலி
பிரதிப் படம்
பேராவூரணி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலரில் இருசக்கர வாகனம் புதன்கிழமை மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
பேராவூரணி அருகே உள்ள சொா்ணக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பத்மராஜா (55). விவசாயி. இவா், பேராவூரணிக்கு வந்துவிட்டு சொா்ணக்காடு சென்று கொண்டிருந்தபோது பேராவூரணி - அறந்தாங்கி சாலையில் புதுக்குடியிருப்பு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ரோடு ரோலரில் பத்மராஜா ஓட்டிச்சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மகன் மோகன்ராஜ் பேராவூரணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...