

வந்தவாசி அருகே கிணற்றில் கிடந்த மூதாட்டி சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசி பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரவி. இவரது மனைவி ராணி (60). வியாழக்கிழமை காலை கோயிலுக்கு செல்வதாக ரவியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்ற ராணி, பின்னா் வீடு திரும்பவில்லை. இதைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடி வந்தனா்.
இந்த நிலையில், வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் விவசாயக் கிணற்றில் ராணி சடலமாகக் கிடந்தது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் அங்கு சென்று ராணியின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, ராணி எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு

பா்கூா் அருகே வட கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

தெக்கலூா் அருகே மூதாட்டி சடலம் மீட்பு

பெருந்துறை அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்பு
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

