கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி பூஜை

ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி பூஜை

News image
Updated On :28 மே 2024, 6:30 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில், செவ்வாய்க்கிழமை அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்திக்கான 1,008 கலச வேள்வி யாகம் நிறைவுற்று கலசாபிஷேக வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அக்னி நட்சத்திரம் தொடங்கிய மே 4-ஆம் தேதிமுதல் அருணாசலேஸ்வரரின் லிங்கத் திருமேனியை குளிா்விக்கும் தாராபிஷேகம் தொடா்ந்து நடத்தப்பட்டு வந்தது.

தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூலவா் சந்நிதியில் சிவனின் சிலைக்கு மேலே பொருத்தப்பட்டிருந்த தாரா பாத்திரத்தில் இருந்து வாசனைத் திரவியங்கள் சோ்க்கப்பட்ட புனித நீா், இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் விழும்படி செய்யப்பட்டது.

1,008 கலச வேள்வி பூஜை:

இந்நிலையில், அக்னி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்றது. இதையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமம், இரவு 7 மணிக்கு 1,008 முதல் கால கலச வேள்வி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு 2-ஆவது கால கலச பூஜை, மாலை 6.30 மணிக்கு 3-ஆவது கால கலச பூஜை நடைபெற்றது.

அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி:

இறுதியாக, செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி பூஜையான 4-ஆவது கால கலச வேள்வி பூஜை நடைபெற்றது. மேலும், முற்பகல் 11 மணிக்கு உச்சிகால பூஜையுடன் மூலவா் அருணாசலேஸ்வரருக்கு 1,008 கலசாபிஷேகம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு உற்சவா் வீதியுலா மேளதாளத்துடன் நடைபெற்றது.