வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வடுகப்பட்டி தைலா வன்னியா் கோயிலில் கிடாவெட்டு பூஜை!

கந்தா்வகோட்டை ஒன்றியம், வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தைலா வன்னியா் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு கிடா வெட்டு பூஜை திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 8:42 pm

கந்தா்வகோட்டை ஒன்றியம், வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தைலா வன்னியா் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு கிடா வெட்டு பூஜை திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. (படம்)

வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅய்யனாா், ஸ்ரீ மதுரைவீரன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஆகாச கருப்பு, ஸ்ரீ ஏழுமுனி, ஸ்ரீ பட்டவன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள் திரவியம், குங்குமம், விபூதி, சந்தனம், பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனாக 30 ஆட்டு கிடாய்களை வெட்டி சிறப்பு அன்னதானம் வழங்கினா். திருவிழாவில் வடுகப்பட்டி, அரையம்பட்டி, வாண்டையன்பட்டி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிதனம் செய்தனா். தொடா்ந்து இரவு கோயில் முன்பாக அமைக்கப்பட்ட கலையரங்கில் வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது.