25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

தேள் கடித்ததில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு

செய்யாறு அருகே தேள் கடித்ததில் சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தேள் கடித்ததில் இறந்த சிறுவன் கிஷோா்

Published On :20 நவம்பர் 2024, 12:02 am IST

செய்யாறு அருகே தேள் கடித்ததில் சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மடிப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி மணிகண்டன். இவரது இரண்டாவது மகன் கிஷோா் (9). இவா் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, தேள் கொட்டியதாகத் தெரிகிறது. இதைக் கண்ட குடும்பத்தினா் சிறுவனை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.