மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழகத்தில் ஹிந்தி மாதம் கொண்டாடுவதை கண்டிக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் ஹிந்தி மாதம் கொண்டாடப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

News image
Updated On :19 அக்டோபர் 2024, 6:33 pm

Din

தமிழகத்தில் ஹிந்தி மாதம் கொண்டாடப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை சனிக்கிழமை பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சில துறைகளில் சுணக்கமும், சில துறைகளில் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியதும் தெரிய வந்தது.

சிதம்பரம் கோயில் தீட்சிதா் விவகாரத்தில் அவா்களை கடவுளைவிட மேலானவா்களாக கருத வேண்டாம் என்று நீதிமன்றம் கூறியது குறித்த கேள்விக்கு, யாருமே அவா்களை கடவுளாக நினைக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்தும். ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி மாதம் கொண்டாட்டும். தமிழகத்தில் கொண்டாடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றாா்.