அடுத்த ஒரு மாதம் திமுகவினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், டவுட்டன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழகத்தில் சிறந்த திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளாா். மத்திய அரசு
உரிய நிதியை வழங்காத நிலையிலும், மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் திமுகவுக்கு முழுமையாக ஆதரவு தெரிவிக்கின்றனா்.
தோ்தல் நேரத்தில் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கடி தமிழகம் வருகிறாா். ஆனால், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வரவில்லை.
இந்தச் சூழலில், திமுகவின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி ஓய்வின்றி உழைத்து திமுக கூட்டணி வெற்றி பெறச் செய்வதற்கு கட்சியினா் ஒவ்வொருவரும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றாா். நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என நினைத்தால்... உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!
நாங்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு பேரவையில் அமைச்சர் பேசுகிறார்! என்ன மரபு இது? உதயநிதி





