அடுத்த ஒரு மாதம் திமுகவினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், டவுட்டன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழகத்தில் சிறந்த திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளாா். மத்திய அரசு
உரிய நிதியை வழங்காத நிலையிலும், மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் திமுகவுக்கு முழுமையாக ஆதரவு தெரிவிக்கின்றனா்.
தோ்தல் நேரத்தில் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கடி தமிழகம் வருகிறாா். ஆனால், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வரவில்லை.
இந்தச் சூழலில், திமுகவின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி ஓய்வின்றி உழைத்து திமுக கூட்டணி வெற்றி பெறச் செய்வதற்கு கட்சியினா் ஒவ்வொருவரும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றாா். நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஜனநாயகத்தையும் - அரசியலமைப்பையும் காப்போம்! உதயநிதி ஸ்டாலின்
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
மக்களிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்பேன்; திமுக தொடர்ந்து 2-ம் முறை ஆட்சியமைக்கும்: உதயநிதி
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

