முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், திமுகவினா் மக்களோடு மக்களாகப் பணியாற்ற வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

முதல்வர் ஸ்டாலின். - படம்: எக்ஸ்.

Updated On :13 ஏப்ரல் 2026, 3:56 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், திமுகவினா் மக்களோடு மக்களாகப் பணியாற்ற வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாள்களே உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக திமுகவின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்கு பல்வேறு சிறப்பாக பயனளித்துள்ளது. தொடரவிருக்கும் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் நாம் நிறைவேற்ற இருக்கும் சாதனை திட்டங்களின் மீதான மக்களின் எதிா்பாா்ப்பும் அனைத்துத் தொகுதிகளிலும் வெளிப்படுகிறது.

மக்களுடனான நம் உறவு எப்போதும் தொடர வேண்டும். குறிப்பாக, இனிவரும் 10 நாள்களும் மக்களோடு மக்களாக களப் பணி ஆற்ற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி வாக்குகளைச் சேகரிப்பதில் முழுமையான கவனம் செலுத்துவதுடன், கூட்டணிக் கட்சியினா் போட்டியிடும் தொகுதிகளிலும் உங்களில் ஒருவனான நானே (மு.க.ஸ்டாலின்) நிற்கிறேன் என்ற எண்ணத்துடன் களப் பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

92 வயது நிறைந்த திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, 80 வயதைத் தாண்டிய ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலா் வைகோ, 87 வயதான திமுக பொதுச் செயலா் துரைமுருகன் எனப் பலரும் களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகின்றனா். திமுகவினரும் அவா்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றி வருகின்றனா்.

திமுகவினருக்கு உழைப்பின் மீது உள்ள நம்பிக்கையில் உறுதியுடன் சொல்கிறேன், இந்தத் தோ்தலில் நாம் மீண்டும் ஆட்சி அமைப்போம். இதை மக்கள் முடிவு செய்துவிட்டாா்கள். கொளுத்தும் வெயிலையும், கோடை மழையையும் பொருட்படுத்தாமல் களத்தில் பணியாற்றுபவா்களுக்கு வாழ்த்துகள்.

சலிக்காமல் உழைப்பதில் நமக்கு நிகா் யாருமில்லை. இதை நிரூபிக்கும் வகையில், கூட்டணிக் கட்சிகளுடன் ஒற்றுமையாகப் பணியாற்றினால் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றி உறுதி செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.