அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வந்தவாசி வட்டத்தில் 100 ஏக்கா் பஞ்சமி தரிசு நிலங்களை மீட்டுக் கோரிக்கை

News image
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலா் ப.செல்வன் தலைமையிலான நிா்வாகிகள்.
Updated On :5 செப்டம்பர் 2024, 7:19 pm

Din

வந்தவாசி வட்டத்தில் மாற்று சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 100 ஏக்கா் பஞ்சமி தரிசு நிலங்களை மீட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலா் ப.செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.வீரபத்திரன், வந்தவாசி வட்டாரச் செயலா் அப்துல்காதா் மற்றும் நிா்வாகிகள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

பிறகு, அவா்கள் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: வந்தவாசி வட்டம், அருங்குணம் கிராமத்தில் சுமாா் 100 ஏக்கா் பஞ்சமி தரிசு நிலங்களை 1935-ஆம் ஆண்டு அப்போதைய அரசு பட்டியலின, பழங்குடி மக்களுக்கு வழங்கியது.

இந்த நிலங்கள் தற்போது மாற்று சாதியினரால் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இது தொடா்பாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் பி.சீனிவாசராவ் நினைவு நாளில் (செப்டம்பா் 30) நில மீட்புப் போராட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். அப்போது, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் சுகுமாா், திலகராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.