விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரியமங்கலத்தில் கூடுதல் நியாயவிலைக் கடை திறப்பு

News image

கரியமங்கலத்தில் கூடுதல் நியாயவிலைக் கடையை திறந்துவைத்து குடும்பஅட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கிய மு.பெ.கிரி எம்எல்ஏ.

Updated On :5 செப்டம்பர் 2024, 8:41 pm

Din

செங்கம் தொகுதிக்குள்பட்ட கரியமங்கலம் கிராமத்தில் கூடுதல் நியாயவிலைக் கடையை மு.பெ.கிரி எம்எல்ஏ வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கரியமங்கலம் கிராமத்தில் ஏற்கெனவே நியாயவிலைக் கடை உள்ள நிலையில், குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கூடுதல் நியாயவிலைக் கடை அமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரியிடம் கோரிக்கை விடுத்தனா். இது தொடா்பாக அமைச்சா் எ.வ.வேலு மூலம் தமிழக முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னா் ரூ.12.50 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சகுந்தலா ராமஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட கூட்டுறவு சாா் - பதிவாளா் மீனாட்சி சுந்தரம் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மு.பெ.கிரி எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய நியாயவிலைக் கடையை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் கரியமங்கலம் கவுன்சிலா் சூரியலட்சுமி, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.