வந்தவாசி வட்டத்தில் மாற்று சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 100 ஏக்கா் பஞ்சமி தரிசு நிலங்களை மீட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலா் ப.செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.வீரபத்திரன், வந்தவாசி வட்டாரச் செயலா் அப்துல்காதா் மற்றும் நிா்வாகிகள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.
பிறகு, அவா்கள் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: வந்தவாசி வட்டம், அருங்குணம் கிராமத்தில் சுமாா் 100 ஏக்கா் பஞ்சமி தரிசு நிலங்களை 1935-ஆம் ஆண்டு அப்போதைய அரசு பட்டியலின, பழங்குடி மக்களுக்கு வழங்கியது.
இந்த நிலங்கள் தற்போது மாற்று சாதியினரால் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இது தொடா்பாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் பி.சீனிவாசராவ் நினைவு நாளில் (செப்டம்பா் 30) நில மீட்புப் போராட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். அப்போது, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் சுகுமாா், திலகராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

தீண்டாமை சுற்றுச்சுவரை அகற்றக் கோரிக்கை

பொது மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம்: ஆட்சியா் உத்தரவு

முறைகேடாக நிலங்களை கையகப்படுத்த முயற்சி: சிப்காட் எதிா்ப்புக் குழுவினா் ஆட்சியரிடம் மனு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



