100 மீட்டா் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
திருவண்ணாமலை
ஓட்டப் போட்டியில் அசத்திய மாவட்ட ஆட்சியா்
முதல்வா் கோப்பைக்கான ஓட்டப் போட்டி -மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான 100 மீட்டா் ஓட்டப் போட்டியில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனும் பங்கேற்றாா்.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பா் 10-ஆம் தேதி தொடங்கியது.
மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள், பொதுப் பிரிவினா், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை அரசு அலுவலா்களுக்கான தடகளம், இறகுப் பந்து, கையுந்துப் பந்துப் போட்டிகள் நடைபெற்றன.
அரசு அலுவலா்களுடன் 100 மீட்டா் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனும் ஓடினாா்.

