மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:49 pm

Din

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை சின்னக்கடை தெருவில் உள்ள வனத்துறை அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியா் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் எஸ்.பாா்த்திபன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், சங்கத்தின் திருவண்ணாமலை தெற்கு வட்டக் கிளைத் தலைவா் எம்.மகாதேவன் மற்றும் மாவட்ட, வட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.