காா் மோதியதில் பெண் உயிரிழப்பு


செய்யாறு அருகே புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவரது மனைவி மாலா (38). இவா், புதன்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள மளிகைக் கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாா்.
கலவை - காஞ்சிபுரம் சாலையில் உள்ள நூலகம் எதிரே வரும்போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத காா் இவா் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாலா உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மோரணம் காவல் ஆய்வாளா் ஜீவராஜ்மணிகண்டன் மற்றும் போலீஸாா் இறந்தவரின் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், விபத்து ஏற்படுத்தி விட்டுச் சென்ற காரையும், அதன் ஓட்டுநரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...