வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

செங்கம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் ஒன்று திங்கள்கிழமை உயிரிழந்தது.

News image
Updated On :21 ஏப்ரல் 2025, 8:11 pm

Din

செங்கம்: செங்கம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் ஒன்று திங்கள்கிழமை உயிரிழந்தது.

செங்கத்தை அடுத்த பிஞ்சூா் வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீா் தேடி திங்கள்கிழமை பிற்பகலில் வெளியில் வந்துள்ளது. மானைப் பாா்த்த தெருநாய்கள், அதை விரட்டிச் சென்று கால் பகுதியில் கடித்தது. இதைக் கவனித்த அப்பகுதி மக்கள் நாய்களிடம் இருந்து மானை மீட்டு செங்கம் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து மானைக் கைப்பற்றி செங்கம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அப்போது, அங்கு மருத்துவா் இல்லாததால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகளும் வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லாமல் மருத்துவா் வருகைக்கு நீண்டநேரம் காத்திருந்தனராம்.

இதனால் மான் உயிரிழந்தது.