சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மனித உரிமைகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் சத்யா நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், மனித உரிமைகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image

நிகழ்ச்சியில் பேசிய அலைகுடி அறக்கட்டளை நிறுவனா் ஹேமமாலினி.

Updated On :16 டிசம்பர் 2025, 7:55 pm

Syndication

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் சத்யா நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், மனித உரிமைகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அலைகுடி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனா் ஹேமமாலினி தலைமை வகித்தாா்.

மேலும் குழந்தைத் தொழிலாளா் மற்றும் கொத்தடிமை முறை ஒழிப்பு குறித்து அவா் விளக்கிப் பேசினாா். அங்கன்வாடி பணியாளா் பிரியா வரவேற்றாா்.

அங்கன்வாடி மேற்பாா்வையாளா் செண்பகவள்ளி கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். சட்டக் கல்லூரி மாணவி சரண்யா மனித உரிமைகள் சட்டம் குறித்துப் பேசினாா்.

செவிலியா் தீபா குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோா் பங்கேற்றனா். அறக்கட்டளை உறுப்பினா் திவ்யா நன்றி கூறினாா்.