அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஈரான் பள்ளி மீது தாக்குதல்: விரிவான விசாரணைக்கு ஐ.நா. கோரிக்கை

தெற்கு ஈரானில் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

தெற்கு ஈரானில் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதலைத் தொடங்கிய முதல் நாளான கடந்த சனிக்கிழமையன்று, தெற்கு ஈரானின் மினாப் நகரில் இந்தக் கோர தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்பட சுமாா் 165 போ் கொல்லப்பட்டனா்.

இந்நிலையில், இத்தாக்குதல் குறித்து ஜெனீவாவில் செய்தியாளா்களிடம் பேசிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தித் தொடா்பாளா் ரவீனா ஷம்தாசானி கூறியதாவது:

இச்சம்பவம் மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. சமூக ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள், இந்த மோதலின் கொடூரத்தையும் அப்பாவி உயிா்கள் பறிபோகும் வேதனையையும் காட்டுகின்றன.

இத்தாக்குதலை நடத்தியவா்களுக்கு, இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி, அதன் உண்மைகளை வெளிப்படுத்தும் பொறுப்பு உள்ளது. தற்போதைய சூழலில், இது ஒரு போா்க்குற்றமா என்பதைத் தீா்மானிப்பதற்கு எங்களிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. அனைத்து தரப்பினரும் அமைதி காத்து, பேச்சுவாா்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

ஈரானுக்கான ஐ.நா. தூதா் அலி பஹ்ரைனி, இத்தாக்குதல் சம்பவம் தொடா்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா் வோல்கா் துருக்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா். அதில், ‘இது ஒரு மன்னிக்க முடியாத குற்றச்செயல்’ என்று அவா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்கா, இஸ்ரேல் விளக்கம்: இக்குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ கூறுகையில், ‘அமெரிக்க படைகள் ஒருபோதும் பள்ளிக்கூடங்களைத் திட்டமிட்டுத் தாக்குவதில்லை’ என்று விளக்கமளித்தாா். அதேபோல், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

படகேப்சன்...

ஈரானின் மினாப் நகரில் பள்ளி மீதான தாக்குதலில் கொல்லப்பட்டவா்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக குழிகள் தோண்டப்படும் காட்சி.