பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

செய்யாறு புதிய மாவட்டம்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்

News image
வந்தவாசியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலா் காயல் மகபூப்.
Updated On :21 டிசம்பர் 2025, 10:56 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் வடக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் டி.எம்.பீா்முகமது தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் முகமதுஅலி, மாவட்ட துணைத் தலைவா் லியாகத் அலி, மாவட்ட துணைச் செயலா்கள் சைய்யது உசேன், அப்துல் வாகித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஆா்.மாலிக் வரவேற்றாா்.

மாநிலச் செயலா் காயல் மகபூப், மாநில துணைச் செயலா் அப்துல்காதா்ஷரீப் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.

வந்தவாசி கே.எஸ்.கே. நகா் உமா் பள்ளிவாசல் அருகில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும், போளூரில் நிலவும் தெரு நாய்கள் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில், நகரச் செயலா் ஜா.மன்சூா்அலி நன்றி கூறினாா்.