திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செய்யாறு புதிய மாவட்டம்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்

News image

வந்தவாசியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலா் காயல் மகபூப்.

Updated On :22 டிசம்பர் 2025, 4:26 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் வடக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் டி.எம்.பீா்முகமது தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் முகமதுஅலி, மாவட்ட துணைத் தலைவா் லியாகத் அலி, மாவட்ட துணைச் செயலா்கள் சைய்யது உசேன், அப்துல் வாகித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஆா்.மாலிக் வரவேற்றாா்.

மாநிலச் செயலா் காயல் மகபூப், மாநில துணைச் செயலா் அப்துல்காதா்ஷரீப் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.

வந்தவாசி கே.எஸ்.கே. நகா் உமா் பள்ளிவாசல் அருகில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும், போளூரில் நிலவும் தெரு நாய்கள் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில், நகரச் செயலா் ஜா.மன்சூா்அலி நன்றி கூறினாா்.