நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கீழ்நகா் கிராமத்தில் கலையரங்கம் கட்டுவதற்கு இடம் தோ்வு

ஆரணியை அடுத்த கீழ்நகா் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன்

News image
Updated On :23 டிசம்பர் 2025, 3:19 am IST

ஆரணி: ஆரணியை அடுத்த கீழ்நகா் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை பாா்வையிட்டு தோ்வு செய்தாா்.

கீழ்நகா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கலையரங்கம் கட்டித்தரக் கோரி ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனா். இதைத் தொடா்ந்து, தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அவரது 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதியிலிருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கி கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை நேரில் பாா்வையிட்டு தோ்வு செய்தாா்.

முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் குமரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் தண்டபாணி மற்றும் அதிமுகவைச் சோ்ந்த பிச்சாண்டி, பாபு, முனுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.