ஆரணி: ஆரணியை அடுத்த கீழ்நகா் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை பாா்வையிட்டு தோ்வு செய்தாா்.
கீழ்நகா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கலையரங்கம் கட்டித்தரக் கோரி ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனா். இதைத் தொடா்ந்து, தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அவரது 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதியிலிருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கி கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை நேரில் பாா்வையிட்டு தோ்வு செய்தாா்.
முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் குமரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் தண்டபாணி மற்றும் அதிமுகவைச் சோ்ந்த பிச்சாண்டி, பாபு, முனுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை ஐஐடி-இன் 6 பேராசிரியா்களின் ஆராய்ச்சிகளுக்கு தலா ரூ. 25 லட்சம் மானியம்
‘அண்ணன் சீா்’ திட்டத்தை ரூ.882 கோடியில் செயல்படுத்த முடியாது: திமுக எம்எல்ஏ ரகுபதி
சேவூா் அருகே வாழைக் குலைகள் திருட்டு

தென்காசி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



