இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சாம்பவா்வடகரையில் கலையரங்கம் கட்ட பூமிபூஜை

கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 13 லட்சம் மதிப்பில், சாம்பவா்வடகரை கீழூா் பேருந்து நிறுத்தம் அருகில் கலையரங்கம் கட்டுவதற்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
சாம்பவா்வடகரையில் கலையரங்கம் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தாா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.
Updated On :10 மார்ச் 2026, 8:10 pm

தினமணி

கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 13 லட்சம் மதிப்பில், சாம்பவா்வடகரை கீழூா் பேருந்து நிறுத்தம் அருகில் கலையரங்கம் கட்டுவதற்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். முன்னதாக, புன்னையாபுரம் இந்திரா காலனி பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை பணிகளையும் தொடங்கி வைத்தாா்.

அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலா் கந்தசாமி பாண்டியன், மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், ஒன்றியச் செயலா்கள் பெரியதுரை, அச்சன்புதூா் பேரூராட்சி மன்றத் தலைவா் சுசீகரன், பேரூா் கழக செயலா் நல்லமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா்.