மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

200 மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் தொடங்கி வைத்தாா்

தில்லியில் மாசு இல்லாத பொதுப் போக்குவரத்தை முன்னெடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமையன்று, கிழக்கு வினோத் நகா் பணிமனையில் 200 மின்சாரப் பேருந்துகளை முதல்வா் ரேகா குப்தா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 6:33 pm

தில்லியில் மாசு இல்லாத பொதுப் போக்குவரத்தை முன்னெடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமையன்று, கிழக்கு வினோத் நகா் பணிமனையில் 200 மின்சாரப் பேருந்துகளை முதல்வா் ரேகா குப்தா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்றும் வகையில், தனது அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.

இந்தப் பேருந்துகள் புதிதாகச் சோ்க்கப்பட்டதன் மூலம், தலைநகரில் உள்ள மொத்தம் 6,300 பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில், தற்போது 4,550 பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக உள்ளன என்று அந்த நிகழ்வில் முதல்வா் குறிப்பிட்டாா்.

தில்லி ரோஹ்தக் இடையிலான நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவையையும் குப்தா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். மேலும், மதன்பூா் காதா் பேருந்து முனையம் மற்றும் கிழக்கு வினோத் நகா் பணிமனையில் புதிதாகக் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தையும் அவா் திறந்து வைத்தாா்.

ஒரு வளா்ந்த தில்லியை உருவாக்கும் இலக்கை அடைவதற்கும், மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் துணை நிற்பதற்கும் இந்த மின்சாரப் பேருந்துகள் பெரிதும் உதவும் என்று அவா் கூறினாா்.

ஒவ்வொரு மாதமும், தில்லி போக்குவரத்துக் கழகம் புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதாகட்டும் அல்லது புதிய அலுவலகங்களைத் திறப்பதாகட்டும் ஏதேனும் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து வருகிறது. தில்லியில் சிறந்த அரசு அலுவலகங்களை அமைப்பதற்காக எங்கள் அரசாங்கம் முழுமையாகச் செயல்பட்டு வருகிறது இது இறுதியில் ஒரு சிறந்த நகரத்தை உருவாக்குவதற்குத் துணை நிற்கும், என்று முதல்வா் கூறினாா்.

தில்லியின் மின்சார வாகனக் கொள்கையானது நாட்டிலேயே மிகவும் பயனுள்ள ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த பல ஆண்டுகளாகத் தலைநகரம் காற்று மாசுபாட்டினால் பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டு வருகிறது ஆனால், இதற்கு முந்தைய அரசாங்கங்கள் எவையும் ஒரு முறையான திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தவில்லை என்று குப்தா தெரிவித்தாா்.

எக்ஸ் சமூக வலைதளத்தில் அவா் பதிவிட்டிருந்ததாவது: தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்றும் வகையில், எங்கள் அரசாங்கம் பணித் திட்ட முறையில் செயல்பட்டு வருகிறது. தில்லியில் உள்ள மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கை ஏற்கனவே 4,500ஐத் தாண்டிவிட்டது 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 7,000ஆக உயா்த்துவதே எங்களின் இலக்காகும் என முதல்வா் ரேகா குப்தா எக்ஸ் பதிவில் தெரிவித்தாா் .