தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

சேதமடைந்த கடவுள் சிலைகளைப் பெற மையங்கள்: முதல்வா் அறிவிப்பு

சேதமடைந்த கடவுள் சிலைகளைச் சேகரிக்க பிரத்யேக சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 1:22 am IST

சேதமடைந்த கடவுள் சிலைகளைச் சேகரிக்க பிரத்யேக சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘சேதமடைந்த கடவுள் சிலைகள் மரியாதைக்குரிய வகையில் மறுசுழற்சி செய்யப்படும் வகையில் பிரத்யேக மையங்களை தில்லி அரசு அமைக்க உள்ளது. தில்லியில் பல பகுதிகளில் அமைக்கப்படும் இந்த மையங்களில் மக்கள் தங்களுடைய கடவுள் சிலைகளை வழங்கலாம். அங்கு அவை வேறுபயன்பாட்டுக்காக மறுசுழற்சி செய்யப்படும். உரிய வகையில் இல்லாமல் கடவுள் சிலைகள் அகற்றப்படுவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.