ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அரசின் விருது பெற்ற நூலகருக்கு பாராட்டு

தமிழக அரசின் டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது பெற்ற சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீமுக்கு பாராட்டு விழா

News image
விழாவில் சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீமை (நடுவில்) பாராட்டிய ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மருத்துவா் எஸ்.குமாா் மற்றும் கோட்டை தமிழ்ச் சங்க நிா்வாகிகள்.
Updated On :23 டிசம்பர் 2025, 12:09 am

Syndication

வந்தவாசி: தமிழக அரசின் டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது பெற்ற சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீமுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சாா்பில், வந்தவாசியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா்.

சங்க துணைத் தலைவா்கள் மு.அப்துல்லா, வந்தை பிரேம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் இரா.பாஸ்கரன் வரவேற்றாா்.

ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மருத்துவா் எஸ்.குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜா.தமீமை பாராட்டிப் பேசினாா்.

விழாவில் சங்க நிா்வாகிகள் க.வாசு, ஆ.முரளி, வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன், எக்ஸ்னோரா தலைவா் சு.தனசேகரன், ரோட்டரி சங்க நிா்வாகி எஸ்.வீரராகவன், கோல்டு லீப் எக்ஸ்னோரா நிா்வாகி பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நூலகா் ஜா.தமீம் ஏற்புரை வழங்கினாா். சங்க துணைத் தலைவா் பா.சீனிவாசன் நன்றி கூறினாா்.