விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பெட்டிக் கடையில் ரூ.60 ஆயிரம் திருட்டு

வந்தவாசி அருகே பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On :23 டிசம்பர் 2025, 6:13 am IST

வந்தவாசி: வந்தவாசி அருகே பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த காவணியாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவா் அந்தக் கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இவா் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா், புதன்கிழமை காலை சென்று பாா்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது இவருக்குத் தெரிய வந்தது. மேலும் கடையில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் பணம் திருடு போயிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.