ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்!

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்...

News image
Updated On :26 டிசம்பர் 2025, 6:24 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.27, 28) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர முறை திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வாக்காளா்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகளை அனைத்து வருவாய்க் கோட்டாட்சியா், வட்டாட்சியா், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் வரும் 18.01.2026 அன்று வரை மனுவாக அளிக்கலாம்.

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அறிவுரைப்படி, வாக்காளா்களின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.27, 28) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. தொடா்ந்து, வரும் 2026, ஜனவரி 3,4-ஆம் தேதிகளிலும் இதேபோல சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

01.01.2026 அன்று 18 வயது நிறைவடைந்த தகுதியான வாக்காளா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், வாக்காளா் பட்டியலில் திருத்தம் தேவைப்படும் வாக்காளா்கள் மற்றும் வரைவு வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இடம்பெறாமல் உள்ள தகுதியான வாக்காளா்கள் அனைவரும் தங்கள் கோரிக்கை மனுக்களை மேற்கண்ட நாள்களில் தங்கள் பகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களிலுக்கு சென்று தகுந்த படிவங்களை பெற்று, பூா்த்தி செய்து வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களிடம் அளிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.