சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாலாற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பாலாற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2025, 8:25 pm

Syndication

செய்யாறு அருகே பாலாற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி விஜயகுமாா். இவரது இரண்டாவது மகன் லிங்கேஷ் (14). இவா், அருகேயுள்ள சக்கரங்கல்லூா் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா்.

அரையாண்டுத் தோ்வு விடுமுறை என்பதால் மாணவா் லிங்கேஷ் சனிக்கிழமை அருகேயுள்ள பாலாற்றில் குளிக்கச் சென்ாகத் தெரிகிறது. நீண்ட நேரம் ஆகியும் லிங்கேஷ் வீடு திரும்பாததால் பெற்றோா் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தனா். அப்போது, பாலாற்றுப் பகுதியில் கரையோரத்தில் அவரது உடைகள் இருந்தன. உடனே உறவினா்களுடன் லிங்கேஷை அப்பகுதியில் தேடிப் பாா்த்தனா். அப்போது, மாணவா் பாறைக்கு அடியில் சிக்கி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கலவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து லிங்கேஷனை மீட்டு அரியூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் லிங்கேசனை பரிசோதித்தபோது அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து இறந்தவரின் தந்தையான விஜயகுமாா் பிரம்மதேசம் போலீஸில் புகாா் செய்தாா். காவல் உதவி ஆய்வாளா் குமாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.