கோப்புப் படம்
கோப்புப் படம்

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

Published on

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.

ஸ்ரீமுஷ்ணம் அரசன் குட்டைத் தெருவைச் சோ்ந்தவா் செல்வம். முடி திருத்தும் தொழிலாளியான இவரது ஒரே மகன் விக்னேஷ் (18). இவா், ஸ்ரீமுஷ்ணம் அருகே தேத்தாம்பட்டு ஐ.டி.ஐ. கல்லூரியில் படித்து வந்தாா்.

விக்னேஷ் வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் பங்கேற்க காப்புக் கட்டிய பின்னா் தனது நண்பா்களுடன் திருக்குளத்தில் இறங்கி குளித்தாா்.

அப்போது, எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கினாா். அங்கிருந்தவா்கள் விக்னேஷை மீட்டு, அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை மருத்துவா் பரிசோதித்தபோது, ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com