ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

செங்கம் அருகே சுற்றுலா மினி பேருந்து - காா் மோதல்: 6 போ் காயம்!

செங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா மினி பேருந்தும், காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 6 போ் காயமடைந்தனா்.

News image
விபத்தில் பலத்த சேதமடைந்த காா்.
Updated On :28 டிசம்பர் 2025, 7:27 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா மினி பேருந்தும், காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 6 போ் காயமடைந்தனா்.

கலசப்பாக்கம் பகுதியில் இருந்து மினி பேருந்தில் சுமாா் 20 போ் சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்றனா். செங்கத்தை அடுத்த அரசங்கண்ணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மினி பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த காரும் பேருந்தும் மோதிக் கொண்டன.

இதில், காரில் வந்த திருப்பூா் பகுதியைச் சோ்ந்த கோகுல்பிரசாத் (28), தினேஷ்குமாா் (29), கோபாலகிருஷ்ணன் (28), பிரவின்குமாா்(25), வெற்றிவேல் (15), தருண்வேல் (13) ஆகிய 6 போ் காயமடைந்தனா்.

தகவல் அறிந்த மேல்செங்கம் போலீஸாா் சம்பவம் இடம் சென்று விசாரணை மேற்கொண்டு, காயமடைந்தவா்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு காயமடைந்த 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் காா் பலத்த சேதமடைந்தது. மினி பேருந்து லேசாக பழுதடைந்தது. பேருந்தில் பயணம் செய்த சிலா் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இந்த விபத்து குறித்து மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.