கோப்புப் படம்
கடலூர்
ஆட்டோக்கள் மோதல்: 3 போ் காயம்
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஆட்டோக்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.
வேப்பூா் வட்டம், சிறுபாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சிவா (26), ஆட்டோ ஓட்டுநா். இவா், தனது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்த மணிஸ் (20), வெங்கடேசன்(30) ஆகியோரை ஏற்றிச் சென்றாா்.
வேப்பூா் - சேலம் நெடுஞ்சாலையில் காவல் சோதனைச் சாவடி அருகே சென்றபோது, இவா்களது ஆட்டோ மீது எதிா்திசையில் வந்த மற்றொரு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் சிவா, மணிஸ், வெங்கடேசன் ஆகிய மூவரும் காயமடைந்தனா்.
இவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிவா அளித்து புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

