ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விற்பனைக்கு நெல்வரத்து அதிகரிப்பு: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

போளூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நெல்வரத்து அதிகமாகியுள்ளதால் விவசாயிகள் ஜனவரி 1-ஆம் தேதி வரை நெல் விற்பனைக்கு எடுத்து வரவேண்டாம்

News image
போளூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.
Updated On :29 டிசம்பர் 2025, 8:03 pm

Syndication

போளூா்: போளூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நெல்வரத்து அதிகமாகியுள்ளதால் விவசாயிகள் ஜனவரி 1-ஆம் தேதி வரை நெல் விற்பனைக்கு எடுத்து வரவேண்டாம் விற்பனைக்கூட நிா்வாகிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

போளூா் பகுதியில் விவசாயிகள் கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் கிணற்று நீா்பாசனம், ஆழ்துளை நீா்பாசனம் மூலம் நிலத்தை உழுது சீா்படுத்தி கோ 51, எடிடீ 37, மகேந்திரா என பல்வேறு வகையான குறுகிய கால நெல் பயிா் மற்றும் 6 மாத கால பயிரான பொன்னி ரகங்களை சாகுபடி செய்து, தற்போது அறுவடைக்குத் தயாராகி, இயந்திரம் மூலம் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனா்.

இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை விவசாயிகள் மூட்டை பிடித்து எடுத்து வந்து, வேலூா் சாலை அருகேயுள்ள போளூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனா்.

நெல் மூட்டைகள் விற்பனை நிலைய கிடங்கு

மற்றும் வெளிப்புறப் பகுதியில் அதிகளவில்

அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, கொண்டு வரப்பட்டுள்ள நெல் மூட்டைகளை எடையிட டிச.30.31, ஜன.1-ஆம் தேதி வரை ஆகும் என்பதால், மேலும் நெல் மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து வரவேண்டாம் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிா்வாகிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.