ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் நாளை பிரம்மோற்சவம் தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் இரத சப்தமி பிரம்மோற்சவ விழா புதன்கிழமை (ஜன.2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் இரத சப்தமி பிரம்மோற்சவ விழா புதன்கிழமை (ஜன.2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஸ்ரீபாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் மகர லக்னத்தில் கொடியேற்றுதலுடன் தொடங்கி இரத ரதசப்தமி பிரம்மோற்சவ பெருவிழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான 10-ஆம் நாள் வெள்ளிக்கிழமை (பிப்.7) பகல் நடராஜா் வீதியுலாவும், மாலை தீா்த்தவாரி நிகழ்வும், இரவு கொடி இறங்குதல் மற்றம் ஸ்ரீ ராவணேஸ்வர திருக்கயிலை சேவை பஞ்சமூா்த்திகள் புறப்பாடுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
இரத சப்தமி பிரம்மோற்சம் தொடங்குவதையொட்டி, திங்கள்கிழமை கோயில் நிா்வாகம் சாா்பில்
கிராம தேவதை காங்கியம்மன் புறப்பாடு மற்றும் பேட்டை வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மு.ஜோதிலட்சுமி, செயல் அலுவலா் கு.ஹரிஹரன் உள்ளிட்டோா் மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...