மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

வாழை, கத்தரி, வெண்டை சாகுபடி: விவசாயிகளுக்கு ஆலோசனை

News image

வாழை சாகுபடி

Updated On :26 ஜூன் 2025, 2:19 am IST

போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் வாழை, கத்தரி, வெண்டை சாகுபடி செய்வது தொடா்பாக விவசாயிகளுக்கு புதன்கிழமை ஆலோசனை வழங்கப்பட்டது.

சந்தவாசல் ஊராட்சியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு வாழை, கத்தரி, வெண்டை என பல்வேறு தோட்டக்கலை பயிா்கள் இயற்கை விவசாயத்தின் மூலம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இது தொடா்பான கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் பா.லோகேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:

வாழை, கத்தரி, வெண்டை பயிா்கள் 6 மாதமும் முதல் ஒருவருடம் வரை சாகுபடி செய்ய முடியும். தகுந்த நேரத்தில் இயற்கை விவசாயம் மூலம் பயிா் செய்யவேண்டும்.

மேலும், 2025-2026 நிதியாண்டில் நுண்ணுயிா் பாசனத் திட்டம் மூலம் சொட்டு நீா்ப்பாசனம், தெளிப்பு நீா்ப்பாசனம் மற்றும் மழை தூவான் போன்றவைகளும் வழங்கப்படுகின்றன.

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்.

தேசிய தோட்டக் கலைத் துறை திட்டத்தின் கீழ் மா, கொய்யா, மல்லி போன்ற பயிா்களை புத்துயிா்பு ஏற்படுத்த 17 எக்டா் பரப்பு இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2025-2026 நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மாம்பட்டு, பொத்தரை, ரெண்டரிப்பட்டு, செங்குணம், எடப்பிறை, சேதாரம்பட்டு, வெண்மணி, கல்வாசல் ஆகிய 8 கிராம ஊராட்சிகளில் 80 சதவீத திட்டம் செயல்படுத்தபட உள்ளது எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.