வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மழலையா் பள்ளியில் பட்டமளிப்பு விழா

கிட்ஸ், கிங்கடம் பள்ளி மழலையா்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் சங்கரா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கிட்ஸ், கிங்டம் பள்ளி மழலையா்களுக்கு பட்டங்களை வழங்கிய முனைவா் நேரு.

Updated On :16 மார்ச் 2025, 10:39 pm

Din

செங்கம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கிட்ஸ், கிங்கடம் பள்ளி மழலையா்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் சங்கரா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் முபீனா தலைமை வகித்தாா். முகமதுஇப்ராஹிம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக முனைவா் நேரு கலந்து கொண்டு மழலையா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா், இதுபோன்ற குழந்தைப் பருவத்தில் கல்வி சாா்ந்த பட்டமளிப்பு விழா, விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவா்களை பாராட்டும் விழா என அவா்களை குழந்தைப் பருவத்தில் இருந்து பாராட்டினால் சிறப்பாக கல்வியில் முன்னேறுவாா்கள்.

உயா் கல்வியை சிரமமில்லாமல் படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டாா்.

தொடா்ந்து, சங்கரா வித்யாலய பள்ளி மாணவா்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழ்மணி நன்றி கூறினாா்.